ஆப்நகரம்

தமிழகத்தில் பிறை தெரிந்தது- நாளை ரம்ஜான் கொண்டாடப்படுவதாக அறிவிப்பு

தமிழகத்தில் பிறை தெரிந்ததால் நாளை ( ஜூன் 26 ) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNN 25 Jun 2017, 9:06 pm
தமிழகத்தில் பிறை தெரிந்ததால் நாளை ( ஜூன் 26 ) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tomorrow eid mubarak in tamilnadu
தமிழகத்தில் பிறை தெரிந்தது- நாளை ரம்ஜான் கொண்டாடப்படுவதாக அறிவிப்பு


இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் மாதத்தில், நோன்பு நோற்று, மாத இறுதியில், ஈகைத் திருநாளாகக் கொண்டாடுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டில், சில இடங்களில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்தில நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை, தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ளார்.

அவர் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வேலூர், சேலம், மதுரை , திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முதல் பிறை இன்று தெரிந்தது. இதனால், நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Happy Ramadan: Tomorrow Eid Mubarak in Tamilnadu.

அடுத்த செய்தி