தமிழக சட்டப்பேரவையில் கடந்த 4ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களைத் தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் மொட்டை போடுவதற்கு இனி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா என கேள்வி எழுப்பினார். அத்துடன், ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்றார்.
பொதுவாக பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூல் செய்யப்படுவதாகவும், தமிழக அரசின் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா என கேள்வி எழுப்பினார். அத்துடன், ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1,749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்றார்.
பொதுவாக பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூல் செய்யப்படுவதாகவும், தமிழக அரசின் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.