ஆப்நகரம்

தமிழ்நாட்டில் இன்று 1,134 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 18 Dec 2020, 9:00 pm
தமிழகத்தில் இன்றைய (18-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.
Samayam Tamil file pic


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் வெவ்வேறு மாவாட்டங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,04,650 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் தற்போது 9,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 221587 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 214612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3938 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை51029 ஆக அதிகரித்துள்ளது. 49329 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 634 பேர் பலியாகியுள்ளனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4617 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து அரசு ஊழியர் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74,957 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,30,12,168 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,170 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,82,915 ஆக அதிகரித்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,954 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி