ஆப்நகரம்

விவசாயிகள் அனாதைகள் அல்ல: விவேக் கொந்தளிப்பு

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் யாரும் அநாதை அல்ல என்று நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

TNN 29 Mar 2017, 8:00 pm
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் யாரும் அநாதை அல்ல என்று நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil total media should rise in support our farmers asks actor vivek
விவசாயிகள் அனாதைகள் அல்ல: விவேக் கொந்தளிப்பு


தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல மாநிsலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பதினாறாவது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வடமாநில விவசாயிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துறைக்கண்ணுவுடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். விவசாயிகளுக்கு அனைத்து இந்திய ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கும் அவர், “முல்லை பெரியாறு, பவானி ஆறு, தாமிரபரணி ஆறு, காவிரி ஆறு, கண்டலேறு, கிருஷ்ணா ஆறு! எல்லோரும் கைவிட்டுவிட்டால் தமிழகம் வாழ்வது எவ்வாறு? நமக்கு உணவளிக்கும் விவசாயிகளை நாம் அநாதைகளாக விட்டுவிடக்கூடாது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி