ஆப்நகரம்

குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளநீர்; சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கனமழை காரணமாக அருவிகளில் அதிகப்படியான நீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Nov 2019, 10:26 am
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றால அருவிகள் பாய்கின்றன. இவற்றில் பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழந்தோட்ட அருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, பாலருவி ஆகியவை அடங்கும்.
Samayam Tamil Courtallam


குற்றால அருவி நீர் பல்வேறு மூலிகைகளில் கலந்து வருவதால் இதில் நீராடுவது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை தென்னகத்தின் ஆரோக்கிய நீரூற்று என்றும் குறிப்பிடுகின்றனர். அருவிக்கரையில் குற்றால நாதர் கோயில் அமைந்துள்ளது.

திமிருவாதத்தின் உச்சம் - குருமூர்த்தியை கண்டித்த அமைச்சர் ஜெயக்குமார்!

எனவே நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆர்வத்துடன் குளித்துச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.

குறிப்பாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேக்கரை, வடகரை, புளியரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தின் மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அரசு ஆவணங்களில் இருந்து 'திருநங்கை' என்ற வார்த்தை நீக்கம்? : கொதித்தெழுந்துள்ள மூன்றாம் பாலினத்தவர்!!

எனவே வெள்ளநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஜினியால் தான் அது சாத்தியம் : சத்தியம் செய்யாத குறையாக சொல்லும் துக்ளக் ஆசிரியர்!!

அடுத்த செய்தி