ஆப்நகரம்

3 நாள் விடுமுறை முடிவு: பெருங்களத்தூர் - வண்டலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

மூன்று நாள் விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து, சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

TNN 6 Sep 2016, 10:27 am
மூன்று நாள் விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து, சென்னை திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil traffic at chennai gst road
3 நாள் விடுமுறை முடிவு: பெருங்களத்தூர் - வண்டலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்


சனி, ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி என கடந்த 3 நாட்களாக, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால், சென்னையில் இருந்த பலரும், தங்களது சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றனர். தற்போது விடுமுறை முடிந்த நிலையில், அவர்கள், மீண்டும் நேற்றிரவு தொடங்கி, சென்னை வந்தபடி உள்ளனர்.

இதனால், வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி