ஆப்நகரம்

ஹெலிகாப்டரில் செல்லும் மோடிக்காக, சாலையில் போக்குவரத்தை தடை செய்த காவல்துறை

மோடி ஹெலிகாப்டரில் செல்வதற்கு, சாலையில் போக்குவரத்து தடை!

Samayam Tamil 12 Apr 2018, 12:36 pm
பிரதமர் மோடி சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த போதிலும், சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil modi chennai


சென்னையில் நடக்கும் DefExpo 2018 எனப்படும் ராணுவ கண்காட்சியை முறைப்படி துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். இந்த கண்காட்சி வரும் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

இதனிடையே காவிரி மேலாண்மை அமைக்காத மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், அவரது வருகைக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நிலவும் இந்த பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, அவருடைய பயண திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அவர் எங்கு சென்றாலும் ஹெலிகாப்டரில் மட்டுமே செல்வார். காரில் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோடியின் தமிழக வருகைக்காக சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் வரையில் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி காரில் வந்தால் கூட, போக்குவரத்து தடை செய்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவரோ ஹெலிகாப்டரில் வருகிறார். ஹெலிகாப்டரில் வருபவருக்கு எதற்கு சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன்காரணமாக சென்னையின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி