ஆப்நகரம்

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை அண்ணாசாலையில் 3 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

Samayam Tamil 17 Oct 2019, 12:25 pm
சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வந்ததால், அவ்வப்போது சாலைகள் அடைக்கப்படுவதும், போக்குவரத்தில் மாற்றம் செய்வதும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் செனடாப் சாலையிலிருந்து, வரும் வாகனங்களை அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி அனுப்பும் சோதனை முன்னோட்டம் நாளைமுதல் தொடங்கி 3 நாட்கள் நடத்தப்படுகிறது. போக்குவரத்து மாற்றம் குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil 63905902


மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்ததால், கடந்த சில ஆண்டுகளாக அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் ஒன்வே போக்குவரத்து நடைமுறை இருந்து வந்தது. மெட்ரோ ரயில் பணிகள் இப்போது முடிவடைந்த காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன் நந்தனம் சந்திப்பில் சேமியா்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்களை, நேராக விஎன் சாலை வழியாக தி நகர் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் போக்குவரத்து இருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.

இப்போது செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திருப்பி அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கிச் செல்வதற்கான போக்குவரத்து முறை வரும் வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வரை சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, பொதுமக்களின் கருத்துகளின் அளிக்கும் வகையில் போக்குவரத்து தொடரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி