ஆப்நகரம்

லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உடல் நசுங்கி பலி

சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா மேம்பாலத்தில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் உடல் நசுங்கி பலி.

Samayam Tamil 11 Jul 2019, 2:46 pm
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் லாரி மோதியதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் உடல் நசுங்கி உயிரிழந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சதீஷை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil Accident 1


சென்னை கிண்டியை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று காலை போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அதே திசையில் சிமெண்ட் கலவை செய்யும் கனரக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது ஆட்டோவை முந்தி சென்ற லாரி, இடதுபுறமாக பூந்தமல்லி வளையில் திரும்பியது. அந்த வழியில் சென்ற காவல் அதிகாரி நடராஜனை கவனிக்காமல் லாரி வேகமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சதிஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நடராஜனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியது. கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது, உயிரிழப்பக்கு காரணமாக அமைந்தது என ஓட்டுநர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி