ஆப்நகரம்

டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் போராட்டம்

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக இன்று காலையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

TNN 15 Jul 2017, 8:49 pm
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக இன்று காலையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டிராஃபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
Samayam Tamil traffic ramasamy suicide protest
டிராபிக் ராமசாமி தற்கொலை மிரட்டல் போராட்டம்


கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கொள்ளையர்கள் ஆட்சியை கலைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிராபிக் ராமசாமி உண்ணாவிரத போராட்டம் இருந்து வந்தார்.

இந்நிலையில் மாலையில் திடீரென கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு டிராபிக் ராமசாமி சென்றார். அங்கு தண்ணீர் தொட்டி வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் படுத்துக் கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை தான் இறங்கிவரப்போவதில்லை என்று டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் கூறியும் அவர் போராட்டதை கைவிடவில்லை.

அடுத்த செய்தி