ஆப்நகரம்

சென்னை-திருவனந்தபுரம் ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை-திருவனத்தபுரம் மெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளனத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

TNN 6 May 2016, 9:10 am
சென்னை: சென்னை-திருவனத்தபுரம் மெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளனத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil train jumps tracks 6 hurt chennai services hit
சென்னை-திருவனந்தபுரம் ரயில் தடம் புரண்டு விபத்து


புறநகர் ரயில் கடந்து செல்வதற்காக காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இதில், ரயிலில் இருந்து கீழே குதித்த 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆவடி அரசு மருத்துவமனியில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், புறநகர் ரயிலும் சேதமடைந்தது. தடம் புரண்ட பெட்டிகளை நள்ளிரவில் மீட்டனர். நேற்று (5.5.2016), இரவு 8.20மணிக்கு நிகழந்த இச்சம்பவத்தை அறிந்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்டஜோரி சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். வசிஷ்டஜோரி தலைமையில் ரயில்வே மற்றும் தேசிய மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்களின் சேவை சுமார் 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதன் விளைவாக சில ரயில்களின் நேரத்தில் மாற்றத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 8.10 மணிக்கும், காலை 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை எக்ஸ்பிரஸ் 8.30 மணிக்கும், காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் 9 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் ரயில்கள் தடையின்றி இயக்கப்பட்டு வருவதாகவும் டேஹ்ர்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி