ஆப்நகரம்

டெக்னிக்கா ரயிலில் கொள்ளையடித்த மர்ம கும்பல்! விசாரணையில் ரயில்வே போலீஸ்

தருமபுரியில் ஓடும் ரயிலில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவிரித்து தேடிவருகின்றன்ர்.

TNN 3 Apr 2017, 12:40 pm
தருமபுரியில் ஓடும் ரயிலில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவிரித்து தேடிவருகின்றன்ர்.
Samayam Tamil train robbery took place at morappur in dharmapuri district on late sunday night
டெக்னிக்கா ரயிலில் கொள்ளையடித்த மர்ம கும்பல்! விசாரணையில் ரயில்வே போலீஸ்


திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கி கேரளா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் அருகே சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் அங்குள்ள ரயில் சிக்னல் கேபிளை துண்டித்துள்ளனர். சிக்னல் துண்டுக்கப்பட்டதை அறிந்த ரயில் டிரைவர் உடனே ரயிலை நிறுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 40 நிமிடம் நின்று கொண்டிருந்த ரயிலில் மர்ம நபர்கள் ஏறி பெண்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மர்ம நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Train robbery took place at Morappur in Dharmapuri district on late Sunday night. More than four unidentified persons got into the train by damaging the signals. They decamped with 18 sovereign of gold jewelries. Railway police registered a case and on the lookout for the robbers.

அடுத்த செய்தி