ஆப்நகரம்

மீனவ இளைஞர்களுக்கு உதவி தொகையுடன் பயிற்சி: ஜெ., அறிவிப்பு

மீனவ இளைஞர்களுக்கு உதவி தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

TNN 24 Aug 2016, 7:26 pm
சென்னை: மீனவ இளைஞர்களுக்கு உதவி தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Samayam Tamil training for fisher youths with scholarship jayalalitha
மீனவ இளைஞர்களுக்கு உதவி தொகையுடன் பயிற்சி: ஜெ., அறிவிப்பு


தமிழக சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையில், மீனவ இளைஞர்கள், இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பற்படையில் வேலைவாய்ப்பை பெரும் பொருட்டு, ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன் பயிற்சிகள் வழங்கப்படும். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் மீனவ மகளிர் சுய உதவிக்குழு பயன்பெறும் வகையில் கடல் மீன் உணவு தயாரிப்பு மையம் துவங்கப்படும். சேத்துப்பட்டு எரியில் சூரிய மின்சக்தி மீன் காட்சியகம் அமைக்கப்படும். முதுநகர் பழையாறு நாகை மீன்பிடி துறைமுகங்கள் வெள்ளாறு பழையாறு வெட்டாறு ஆகிய ஆற்று முகத்துவாரங்கள் ரூ.18.30 கோடி செலவில் தூர் வாரப்படும்.

தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தி 2010-11 ஆம் ஆண்டு 1.71 லட்சம் டன் என இருந்தது. இது தற்போது 2.4 லட்சம் டன் என அதிகரித்துள்ளது. இதனை 4.5 லட்சம் டன்களாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பவானிசாகர் அகரப்பேட்டை திருமங்கலக்கோட்டை நல்லிக்கோட்டை மஞ்சளாறு ஆகிய 6 இடங்களில் ரூ.13.65 கோடியில் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணைகள் அமைக்கப்படும். பழவேற்காடு, ஜாம்பவனோடை, கரையூர்தெரு, கொம்புத்துறை, மோர்பனை ஆகிய 5 இடங்களில் ரூ.977 கோடி செலவில் குளிரூட்டப்பட்ட கிடங்கு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்றார்.

மேலும், சென்னை மெரினா கடற்கறையில் பாய்மரப்படகு அகாடமி மற்றும் பாய்மரம், துடுப்பு படகு போட்டிக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் மின் நூலகம் அமைக்கப்படும். ரூ.2 கோடி செலவில் தேசிய மாணவர் படை பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி