ஆப்நகரம்

தூத்துக்குடி சிவன் கோவிலில் நடைபெற்ற திருநங்கை திருமணம்!

தூத்துக்குடியில் நடைபெறவிருந்த திருங்கை திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 31 Oct 2018, 2:51 pm
தூத்துக்குடியில் நடைபெறவிருந்த திருங்கை திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த நிலையில் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil ttt


தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் சங்கர ராமேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பி.ஏ ஆங்கில இலக்கியம் படித்த ஸ்ரீஜா என்ற திருநங்கைக்கும், பி. அருண் குமார்என்பவருக்கும் இன்று காலை 10.45 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது.
தூத்துக்குடி சிவன் கோவிலில் நடைபெற்ற திருநங்கை திருமணம்!

இருகுடும்பத்தின் சமதத்துடன் நடக்கவிருந்த திருமணத்திற்கு முதலில் சிவன் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால் கடைசியில்திருமணத்திற்கு அனுமதி வழங்க மறுத்தது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினர்முன்னிலையில் கோவில் நிர்வாகமும், மணமக்களின் குடும்பத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவாத்தையில் சமரசம் ஏற்பட்டதால் திருமணம் இனிதாக நடைபெற்றது. அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.

அடுத்த செய்தி