ஆப்நகரம்

திருநங்கைகளை இப்படிச் செய்யலாமா? சேலம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை!

சேலத்தில் காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து, தங்களை மிரட்டுவதாக கூறி திருநங்கைகள் 50க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 2 Apr 2019, 11:33 pm
தங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், பொது இடங்களில் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் கூறி, சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை திடீரென்று 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட்டனர்.
Samayam Tamil transgenders protest against police for fake case register in salem
திருநங்கைகளை இப்படிச் செய்யலாமா? சேலம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை!


அவர்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் பள்ளப்பட்டி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் சமாதானம் அடையாத அவர்கள், தொடர்ந்து காவல்துறையினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனிடையே அவர்கள் கூறும்போது,இந்த தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், எங்களை அவதூறாக பேசுவதற்கு பதிலாக எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

அடுத்த செய்தி