ஆப்நகரம்

அதிர்ச்சியில் சென்னைவாசிகள், அதிக கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்துகள்!

மாநில அரசுப் போக்குவரத்து பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த விவகாரம் தொடர்பாகப் போக்குவரத்துக் கழகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 30 Dec 2019, 1:28 pm
சென்னையில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்த அரசுப் பேருந்துகள் குறித்த புகார் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துக் கழகம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil high ticket


போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் நிலையிலும், தனியார் பேருந்துகளை விட குறைந்த கட்டணத்தை அரசு பேருந்துகள் வசூலித்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பயனடைகின்றனர். இருப்பினும் ஒருசில நடத்துனர்கள் முறைகேடுகளில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

குறிப்பாக இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த முறைகேட்டு புகாரில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் பலர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதே போல் இந்த செய்திகளைப் பார்த்தும் பல பயணிகள், அதிகக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக புகார் அளித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து அலுவலகத்தில், பயணச்சீட்டு முறைகேடு தொடர்பான புகார்கள் குவிந்து வருகிறது.

ஆசை யாரைவிட்டது? -போலி ஆவணங்கள் மூலம் ஆதினமாக முயன்ற வாலிபர் கைது!!

வெளியூர்களிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 16 கிமீ வரை பயணம் செய்யும் பயணிகளிடம் 13 ரூபாயும், 24 கிமீ வரை பயணம் செய்யும் பயணிகளிடம் 19 ரூபாயும் வசூலிக்க அரசு நிர்ணயம் செய்திருந்தது.

இந்நிலையில், விழுப்புரத்திலிருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வரும் அரசுப் பேருந்துகள் 13 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டிய இடத்தில் 6 ரூபாய் அதிகம் வசூலித்து வருவதாக கடந்த ஓராண்டாகப் போக்குவரத்துக் கழகத்திற்குத் தொடர் புகார்கள் வந்தது.

2019-இல் தேசத்தை புரட்டிப்போட்ட குற்ற சம்பவங்கள்..!

புகாரில், 16 கிமீக்கும் குறைவான தூரத்திற்கு அரசுப் பேருந்துகள் பயணிகளிடமிருந்து 19 ரூபாய் பணம் வசூலிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி முறைகேடாக வசூலிக்கப்படுவதால், போக்குவரத்துக் கழகத்திற்கு 50 லட்சம் ரூபாய் கூடுதல் வருமானம் வரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரங்களோடு வெளியிட்டிருந்தது. எனினும், இப்போதும் அரசுப் பேருந்துகள் முறைகேடாக அதிக கட்டணம் வசூலித்து வருகிறது.

அடுத்த செய்தி