ஆப்நகரம்

மனசாட்சிப்படி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: நீதிபதிகள்!

நாளை நல்ல முடிவுடன் வருவார்கள் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

TNN 10 Jan 2018, 7:30 pm
சென்னை: நாளை நல்ல முடிவுடன் வருவார்கள் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Samayam Tamil transport employees should back to work tomorrow says high court
மனசாட்சிப்படி போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: நீதிபதிகள்!


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 7வது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில், பொங்கல் பண்டிகை வருவதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

நாளை நல்ல முடிவுடன் தொழிற்சங்கத்தினர் வருவார்கள் என்று நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2.44 ஊதிய உயர்வு காரணியை தற்காலிகமாக ஏற்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்திருந்தனர்.

மேலும் ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டால், பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தினர்.

Transport Employees should back to work tomorrow says High Court.

அடுத்த செய்தி