ஆப்நகரம்

வாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி - அபராதத்தொகை குறைக்கப்படும் :போக்குவரத்துத்துறை அமைச்சர்

புதிய மோட்டார் வாகன சட்ட அபராதத் தொகையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்துதெரிவித்து வரும் நிலையில், இந்த அபராதத்தொகை குறைக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Sep 2019, 2:00 pm
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பலமடங்கு அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துவரும் இந்த நிலையில், இப்படி ஒரு அபராதத்தை அரசு திணிப்பது சாமானிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
Samayam Tamil mr-vijayapsakar-18054-1559643208


இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் கருத்துதெரிவித்து வரும் நிலையில், இந்த அபராதத்தொகை குறைக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் அருகே உள்ள நொய்யலாற்றுப்பகுதியில், தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

“போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை முதல்-அமைச்சர் ஒப்புதலுடன் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”.

புதிய அபாராதத்தொகையால், சாமானியர்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது. இந்த விவகாரத்தில் அரசு, விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிபார்ப்பாக இருக்கிறது. ஏதாவது நல்லது செய்தால் நலம்.

அடுத்த செய்தி