ஆப்நகரம்

தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து கடுமையாக பாதிக்க வாய்ப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக போக்குவரத்து சங்கங்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து அமைப்பினர் நாளை வேலைநிறுத்தம்

TNN 19 Jan 2017, 2:20 pm
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக போக்குவரத்து சங்கங்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து அமைப்பினர் நாளை வேலைநிறுத்தம் அறிவித்துள்ள காரணத்தால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவையானது நாளை கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil transport union and road transport association announced strike tomorrow
தமிழகம் முழுவதும் நாளை போக்குவரத்து கடுமையாக பாதிக்க வாய்ப்பு


ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி, தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக களம் இறங்கிய மாணவர்கள், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மாணவர்களின் கோரிக்கைகள் விண்ணை அதிரச் செய்து வருகிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஆனால், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என பிரதமர் மோடி கைவிரித்து விட்டார். அதனையடுத்து, போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. அதேபோல், தமிழகம் முழுவதும் ஆட்டோ, வேன், கால்டாக்ஸி ஆகியவை நாளை ஓடாது என தமிழக சாலை போக்குவரத்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து சங்கங்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து அமைப்பினர், நாளை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள காரணத்தால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவையானது கடுமையாக பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Transport Union and Road Transport Association announced strike tomorrow

அடுத்த செய்தி