ஆப்நகரம்

நிலுவைத் தொகை: போக்குவரத்து சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்த நோட்டீஸ்

நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து கழகங்கள் சாா்பில் இன்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Jun 2018, 3:51 pm
நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்து கழகங்கள் சாா்பில் இன்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Transport Vijayabaskar


சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொ.மு.ச. அலுவலகத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

போக்குவரத்துத் தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தை உாிய கணக்கில் செலுததாமல், தொடா்ந்து போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்தி வருவதாகவும், 5 ஆயிரம் கோடியாக இருந்த பாக்கித் தொகை, 6 ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி வருவதாக தீா்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மேலும் 13வது ஊதிய ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து தொகையையும், 2016 செப்டம்பா் ஒன்றாம் தேதியிட்டு வழங்க வேண்டும் என்றும், இதேபோல் ஓய்வூதியதாரா்களுக்கான பணபலன்களை நிலுவை வைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தொடா்பாக தங்களை அழைத்துப் போசி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து சங்கங்கள் சாா்பில் நோட்டீஸ் வங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கிய 2 வாரகாலத்திற்கு பின்னா் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பது விதியாக உள்ளது. இந்நிலையில் வருகிற 19ம் தேதியோ, அல்லது அதற்கு பின்னரோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தொழிற்சங்கத்தினா் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி