ஆப்நகரம்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டதாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Nov 2018, 5:47 pm
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டதாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil CMBT


வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி., கூட்டுறவு நாணய சங்க பிடித்தம் என போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் ரூ.7000 கோடி நிலுவைத் தொகை, ஊழியர்களுக்கு இன்னுக் வழங்கப்படாமல் இருக்கிறது.

இதனையடுத்து, அந்த பணத்தை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஆண்டு மே மாதம், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது. அரசு அளித்த வாக்குறுதியை காப்பாற்றததால், மீண்டும் டிசம்பர் மாதம் காத்திருப்பு போராட்டத்தை நட்த்தினர்.

ஊழியர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, டிச. 27ம் தேதி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்களது அடிப்படையான கோரிக்கைகளான, 2.57 % ஊதிய உயர்வு மற்றும், நிலுவையிலுள்ள ரூ. 7000 கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அரசு தரப்பிலிருந்து வெறும் 2.44 % சம்பள உயர்வு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால் ரூ.7000 கோடி நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது.

மீண்டும் ஜன.3ம் தேதி போக்குவரத்து ஊழியர்களுடன் நடத்துவதாக அரசு அறிவித்தது. ஆனால் அதன்படி செய்யவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ஊழியர்கள் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில், தற்போது மக்களின் நலன் கருதி போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், மக்களின் நலனுக்காக தற்போது தொழிலாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி