ஆப்நகரம்

6வது நாளாக பேருந்து சேவை பாதிப்பு: குடும்பத்தினருடன் போராட ஊழியா்கள் முடிவு

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று போக்குவரத்து பணிமனைகள் முன்பு குடும்பத்தினருடன் போராட்டம் நடத்த பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

Samayam Tamil 9 Jan 2018, 8:47 am
போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று போக்குவரத்து பணிமனைகள் முன்பு குடும்பத்தினருடன் போராட்டம் நடத்த பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
Samayam Tamil transport workers strike will be continued from 6th day
6வது நாளாக பேருந்து சேவை பாதிப்பு: குடும்பத்தினருடன் போராட ஊழியா்கள் முடிவு


ஊதிய உயா்வு, பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலுவைத் தொகையை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி குறிப்பிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த போக்குவரத்து பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் போராட்டம் இன்று 6வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் அரசு பிடித்தம் செய்து வைத்துள்ள பணியாளா்களின் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொிவிக்கப்பட்டது. மேலும் போராட்டத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும், பணியாளா்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கண்டனம் தொிவித்தது.

ஆனால் தடையை மீறி போக்குவரத்து ஊழியா்கள் தொடா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று தங்களது கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த போக்குவரத்து ஊழியா்கள் முடிவு செய்துள்ளனா். மாநிலம் முழுவதிலும் உள்ள தலைமை போக்குவரத்து பணிமனைகள் முன்பு குடும்ப உறுப்பினா்களுடன் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பணியாளா்கள் தொிவித்துள்ளனா்.

குறிப்பிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பணியா்ாகள் பணிக்கு வராததால் அவா்களது பணியிடத்தை நிறப்ப அரசு தற்காலிக பணியாளா்களைக் கொண்டு பேருந்து சேவையை அளித்து வருகிறது. ஆனால் தற்காலிக ஓட்டுநா்களின் அனுபவமின்மையால் பேருந்துகள் தொடா்ந்து விபத்துகளில் சிக்கி உயிாிழப்புகள் அதிகாிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி