ஆப்நகரம்

விபரீத விளையாட்டில் பயங்கரம்; சென்னையில் மரப்பெட்டிக்குள் சிக்கிய சிறுமிகள் - 30 நிமிட அதிர்ச்சி!

மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்டு விளையாடிய சிறுமிகளால் நினைத்துப் பார்க்க முடியாத சோகம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 5 May 2019, 1:04 pm
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரிகள் சாருலதா(5), தனுஸ்ரீ(7). பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் சிறுமிகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
Samayam Tamil Dead


அப்போது விளையாடிய நிலையில், இருவரும் மரப் பெட்டி ஒன்றிற்குள் ஒளிந்து கொள்ள திட்டமிட்டனர். இந்நிலையில் உள்ளே சென்றதும், பெட்டி வெளிப்புறமாக பூட்டிக் கொண்டது.

இதையடுத்து பெற்றோர்கள் மதிய உணவிற்கு வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் பெட்டிக்குள் சிக்கிக் கொண்ட சிறுமிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இருவரையும் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தனுஸ்ரீயை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இருப்பினும் சாருலதா தீவிர சிகிச்சைக்கு பின் காப்பாற்றினர். 30 நிமிடங்களுக்கு மேலாக, பெட்டிக்குள் அடைபட்டு கிடந்ததால், மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே தனுஸ்ரீயை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர். இருகுழந்தைகளில் ஒருவரை இழந்ததால், பெற்றோர் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி