ஆப்நகரம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு; மேலும் ஒருவர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு வழக்குத் தொடர்பாக சென்னை சூளைமேட்டைச் சேர்நத் சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 18 Apr 2018, 5:29 am
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு வழக்குத் தொடர்பாக சென்னை சூளைமேட்டைச் சேர்நத் சுப்பிரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil teacher arrested


அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. 1,058 காலிபணியிடங்களுக்கு 1,22,000 பேர் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, பலருக்கும் மதிப்பெண் வித்தியாசம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 200க்கும் மேற்பட்டோர்க்கு விடைத்தாள் மதிப்பெண்ணை விட கூடுதலாக இருந்ததால், தேர்வு வாரியம் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து, தேர்வு வாரியம் நடத்திய அதிரடி விசாரணையில், தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கூடுதல் மதிப்பெண்ணுக்காக 30 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் பெறப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா அளித்த புகார் அடிப்படையில், 150 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணேசன் என்ற டாக்சி டிரைவர் மற்றும் பள்ளிக்கல்வி துறை ஊழியர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேட்டில், கைது செய்யப்பட்ட துறை ஊழியர் விநாயகமூர்த்தி உட்பட 6 பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும், இந்த முறைகேட்டில் தொடர்பாக 150 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், முறைகேடு வழக்குத் தொடர்பாக சென்னை சூளைமேட்டைச் சேர்நத் சுப்பிரமணி என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி