ஆப்நகரம்

முக்கிய அறிவிப்பு: இந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்..! - தமிழக அரசு

கொரோனா தொற்று நோயாளிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழக அரசு உத்தரவு.

Samayam Tamil 4 Apr 2020, 5:25 pm
கொரோனா தோற்று சமூக பரவலை தடுக்கும் நோக்கிலும், நோயாளிகளின் எணிக்கையை கருத்தில்கொண்டும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil இந்த தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறலாம்




மேலும், பல பேருடைய மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதால் எண்ணிக்கைகள் கூடும் என சந்தேகம் எழுகின்றது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க சில தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் மருத்துவ மனைகளில், விருப்பப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் சிகிச்சைக்கான செலவுகளை அரசு ஏற்காது.


தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளின் தினசரி மருத்துவ விவரங்கள் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

கேரளாவுக்கு எப்போதும் தமிழ்நாடு உற்ற துணையாக இருக்கும்..! - முதல்வர் பழனிசாமி

மேலும் சிகிச்சை அளித்து வரும் சம்மந்தபட்ட தனியார் மருத்துவமனைகள் நோயாளி குறித்த தின அறிக்கையை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி