ஆப்நகரம்

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு; மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வால் அச்சம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 8:20 am
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவால், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Mettu Dam


கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடக அணைகள் நிரம்பியதை அடுத்து, தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தமிழகத்தில் பாயும் காவிரி ஆற்றில் நீர் நிரம்பி ஓடுகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 116.98 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 61,644 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் இருப்பு 88.73 டி.எம்.சியாக இருக்கிறது. விரைவில் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் மொத்த நீரும் உபரிநீராக திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும் நில அதிர்வு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Tremors hit Salem surroundings due to Mettur Dam water.

அடுத்த செய்தி