ஆப்நகரம்

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாம்புடன் நூதன போராட்டம்!!

ஜாதி (ST) சான்றிதழ் கேட்டு பழங்குடியின மக்கள் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாம்புடன் நூதன போராட்டம்.

Samayam Tamil 27 Feb 2019, 6:30 pm
ஜாதி (ST) சான்றிதழ் கேட்டு பழங்குடியின மக்கள் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாம்புடன் நூதன போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டி கிராமத்தில் பழங்குடியினமக்கள் தங்களுக்கு ஜாதி (ST) சான்றிதழ் வழங்க கோரி அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாம்புடன் வந்து நூதன போராட்டம் நடத்தினர்.

அருப்புக்கோட்டை மற்றும் சின்ன மூப்பன்பட்டி பகுதிகளில் 500ககும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை அரசாங்கம் காட்டுநாயக்கன்என்ற ஜாதி சான்றிதழ் 150க்கும் மேற்பட்ட அவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது.

தற்போது உள்ள அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பழங்குடியின மக்கள் எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது இயலாது என்றும் விருதுநகர் மாவட்டத்தில் காட்டுநாயக்கன் ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்று சென்னை உள்ள பழங்குடியின இயக்குனர் இதை தெரிவித்துள்ளார்.

ஆகையால் உங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க இயலாது என்று கூறிவிட்டார்ஏற்கனவே எங்கள் பழங்குடியின மக்களுக்குகாட்டுநாயக்கன் (ST)என்று ஜாதி சான்றிதழ் அரசாங்கம் வழங்கியுள்ளது. தற்போது உள்ள வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வாசல் முன்பு பாம்புடன்வந்து கழுத்தில் பாம்பை போட்டு மேலும் பாம்பை தரையில் ஆட விட்டு முற்றுகை போராட்டத்தை நடத்தி வந்தனர்.

ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்று கூறினர்.

அடுத்த செய்தி