ஆப்நகரம்

திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்த 4 பேர் கைது!

திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து, விற்பனை செய்துவந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

TNN 11 Aug 2016, 10:28 pm
திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து, விற்பனை செய்துவந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil trichy 4 arrested for making fake driving licenses
திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்த 4 பேர் கைது!


அங்குள்ள மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் சேக்ஸ்பியர். சமீபத்தில், சத்திரம்பேருந்து நிலையம் பகுதியில் இவரது கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் சேதமடைந்த காருக்கு, இன்சூரன்ஸ் கோரி அவர் காப்பீட்டு முகவரிடம் ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது ஓட்டுநர் உரிமம் போலி என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக, சேக்ஸ்பியர் திருச்சி மலைக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆண்டாள்வீதி, சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த சிவகுமார், சுப்பிரமணி, மதிவாணன் மற்றும் ராஜலிங்கம் ஆகிய 4 பேரை கைது செய்து, விசாரித்தனர். திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், போலியாக ஓட்டுநர் உரிமங்களை தயாரித்து விற்பனை செய்துவந்ததாக, அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி