ஆப்நகரம்

தங்கக்கடத்தலில் ஈடுபட்ட திருச்சி சுங்க துறை அதிகாரிகள் உட்பட 19 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 6 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குருவிகள் 8 பேர் உட்பட 19 பேரை சிபிஐ கைது அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 6 Aug 2018, 5:58 pm
திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 6 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குருவிகள் 8 பேர் உட்பட 19 பேரை சிபிஐ கைது அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil trichy-aiprot
தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக 19 பேர் கைது- சிபிஐ அதிரடி


நேற்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த 70 பயணிகளிடம், விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நீடித்து வருகிறது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த 70 பயணிகளில் தற்போது 41 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 8 பெண்கள் உட்பட 29 பயணிகளிடம் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ’குருவிகள்’ என சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டு விட்டு நாடு பொருட்களை கடத்தி சென்று தருபவர்களுக்கு ’குருவிகள்’ என்று பெயர். தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வரும் 37 பேரும் ’குருவிகள்’ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற பல்வேறு தங்க கடத்தல் சம்பவங்களில், அங்கு பணியாற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்புள்ளதாக புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து திருச்சு சுங்கப் பிரிவு உதவி ஆணையர் மற்றும் இரண்டு கண்காணிப்பாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதில் 6 சுங்கத்துறை அதிகாரிகளை தற்போது சிபிஐ கைது செய்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 8 குருவிகள், விமான பயணிகள் உட்பட மொத்த 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இதற்கிடையில் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 8 லட்சம் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சுங்கப்பிரிவு அதிகாரிகள் சிபிஐ-யின் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்பத்தினரின் வசிக்கும் வீடு, அதிகாரிகள் தங்கியிருக்கும் அறைகள் மற்றும் அவர்களது சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்க கடத்தல் விவகாரத்தில் திருச்சி விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 25 மணி நேரத்தில் நடைபெற்ற விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள 19 பேரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த செய்தி