திருச்சி: திருச்சி வெடிமருந்து தொழிற்சாலை விபத்தையடுத்து, அந்த ஆலை சீல் வைக்கப்படும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதியளித்துள்ளார்.
திருச்சி துறையூர் அருகே முருங்கப்பட்டி என்ற இடத்தில் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. மலைகள், பாறைகளைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் மொத்தம் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொழிற்சாலையில், வெடிப்பொருள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
விபத்து ஏற்பட்ட தனியார் வெடிமருந்து ஆலையை அகற்றக் கோரி நீண்ட காலமாகவே அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனையும் முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம், விபத்து நடந்த ஆலை 24 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
Trichy ammunition factory blast: Within 24 hours it will be sealed-Minister
திருச்சி துறையூர் அருகே முருங்கப்பட்டி என்ற இடத்தில் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. மலைகள், பாறைகளைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் மொத்தம் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொழிற்சாலையில், வெடிப்பொருள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி சுமார் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
விபத்து ஏற்பட்ட தனியார் வெடிமருந்து ஆலையை அகற்றக் கோரி நீண்ட காலமாகவே அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனையும் முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம், விபத்து நடந்த ஆலை 24 மணி நேரத்தில் மூடி சீல் வைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
Trichy ammunition factory blast: Within 24 hours it will be sealed-Minister