ஆப்நகரம்

14 இடங்களில் இலவச நீர்மோர் பந்தல் - திருச்சி மாநகராட்சி பொதுமக்கள் கவனத்திற்கு!

கோடை வெயிலில் பொதுமக்களின் உதவும் வகையில் நீர்மோர் பந்தல்களைத் திறந்து திருச்சி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Samayam Tamil 25 Feb 2019, 8:43 pm
தமிழ்நாட்டில் சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil Trichy


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் 14 இடங்களில் இலவச நீர்மோர் பந்தல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த நீர்மோர் பந்தல்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சூரிய வெப்பத்தால், பொதுமக்கள் உடலில் நீர்த்தன்மையை நிலைநிறுத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நீர்மோர் பந்தல்கள் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுக் கூடங்கள் அருகில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீர்மோர் பந்தல்கள் தினசரி காலை 8 மணிக்கு தொடங்கும். அதன்பின்னர், நீர்மோர் பந்தல் தீரும் வரை நடத்தப்படும்.

இதன்மூலம் 500 முதல் 600 வரையிலான பொதுமக்கள் பயன்பெறுவர். வரும் காலங்களில் நீர்மோர் பந்தல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்தார். இதுபோன்ற நீர்மோர் பந்தல்களை கடந்த 2016ல் திருச்சி மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

அடுத்த செய்தி