ஆப்நகரம்

திருச்சி: ஒரு ரூபாய்க்கு இட்லி - அசர வைக்கும் பஞ்சாயத்து தலைவர்!

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்துவருகிறார் திருச்சி மாவட்ட கிராமத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து தலைவர்.

Samayam Tamil 4 May 2020, 4:28 pm
கோவை மாவட்டத்தில் கமாலாத்தாள் என்ர 85 வயது பாட்டி தள்ளாத வயதிலும் கொரோனா பீதியால் உலகமே ஊரடங்கியுள்ள போதிலும் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பலரின் பசியைப் போக்கி வருகிறார்.
Samayam Tamil ஒரு ரூபாய்க்கு இட்லி


அவரது அர்ப்பணிப்புமிக்க உழைப்பு பலருக்கு பாடமாக முன்மாதிரியாக உள்ளது. கமலாத்தாள் பாட்டியின் சேவையைப் பார்த்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஊரின் பஞ்சாயத்து தலைவர் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கிராம மக்களின் பசியைப் போக்க நினைத்த அவர் வெங்கடாசலபுரத்தில் உள்ள காமராஜர் மண்டபத்தில் வைத்து 1 ரூபாய்க்கு சட்னி, சாம்பாருடன் இட்லி விற்பனை செய்துவருகிறார். வருமானம் இல்லாத காரணத்தால் காலை உணவையே மறந்துவிட்ட மக்கள் இதனால் பசியாறி வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வு: கோவையில் அதிகரித்த மக்கள் நடமாட்டம்!

மே 1ஆம் தேதி முதல் இந்த விற்பனை நடைபெறுகிறது. பழனிசாமி தன்னுடன் இருவரை வேலைக்கு அமர்த்தி இட்லி விற்பனை செய்கிறார். காலை 7 மணி முதல் 9 மணி வரை தினமமும் 650 முதல் 675 இட்லிகள் விற்பனையாவதாக கூறியுள்ளார்.

“காமராஜர் ஆட்சிக் காலத்தில் காவேரி ஆறு புள்ளம்பாடி கால்வாய் திட்டத்தின் மூலம் எங்கள் ஊருக்கு வந்தபின்னர் தான் இங்கு விவசாயம் செழித்தோங்கியது. நாங்கள் அவருக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்று பழனிசாமி கூறியுள்ளார்.

அம்மா உணவகம் செயல்படும் விதமும் தனக்கு ஊக்கமாக இருந்ததாகவும் பழனிசாமி கூறியுள்ளார். ஒரு இட்லியை உருவாக்க 2.25 ரூ தேவைப்படும் நிலையில் இட்லி ஒன்றுக்கு 1.25 ரூ நஷ்டம் வந்தாலும் தன் ஊர் மக்கள் பசியாற வேண்டும் என பழனிசாமி இதை முன்னெடுத்து வருகிறார்.

2000 குடும்பங்கள் வசிக்கும் வெங்கடாசலபுரம் கிராமத்தில் ஒரு உணவகம்கூட கிடையாது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் பழனிசாமியின் முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று பலர் முன்னெடுக்கும் போது கொரோனாவால் உருவான பசி, பட்டினியை எளிதில் போக்க முடியும் என்கின்றனர் மக்கள்.

அடுத்த செய்தி