ஆப்நகரம்

கொரோனா பரவலைத் தடுக்க திருச்சியில் உருவான ரோபோ!

கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக திருச்சியில் பிரத்யேக ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 30 Mar 2020, 3:48 pm
உலகமே கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்து வருகிறது. சுகாதார கட்டமைப்பில் சிறந்து விளங்கும் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளும் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. வல்லரசு நாடாக வலம் வரும் அமெரிக்காதான் அதிகளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ள நாடாக உள்ளது.
Samayam Tamil கொரோனா பரவலைத் தடுக்க திருச்சியில் உருவான ரோபோ


கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உடனடியாக உருவாக்க உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. உயிரிழப்பும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அங்கு மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நாடு ஆரம்பத்திலிருந்து கடைபிடித்த முக்கிய நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றிவருகின்றன. வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிலிருந்து அவர்களை பரிசோதிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் உடனடியாக பரவிவருகிறது. கடந்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் அடக்கம்.

கொரோனா: தமிழ்நாட்டில் இன்றைய நிலவரம் என்ன?

ஈரோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மட்டுமல்லாமல் அவரது பத்து மாத குழந்தை, தாயார், பணிப் பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தடுக்கும் விதமாக சீனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், உணவுகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஹெலி கேமராக்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த புரொப்பலர் டெக்னாலஜி என்ற நிறுவனம் நோயாளிகளுக்கு மருத்துகள், உணவுகள் வழங்க பிரத்யேக ரோபோக்களை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோக்களை ரிமோட் மூலம் இயக்கலாம். ஒரு மணி நேரம் சார்ஜ் ஏற்றினால் மூன்று மணி நேரம் செயல்படும்.

இது செயல்படும் விதத்தை பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி