திருச்சி: தஞ்சாவூர் அருகே குடியிருப்புப் பகுதியில் 7 அடி நீள முதலை காணப்பட்டது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வடுகக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருக்க வேண்டிய முதலை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டின் கதவு ஓரத்தில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை காலை வின்சென்ட் என்பவரது வீட்டின் கதவு இடுக்கில் 7 அடி நீள முதலை இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் முதலையை மீட்டனர். இதனிடையே வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடுகக்குடி அருகேயுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்த சில முதலைகளில், இது நகர்ந்து இங்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து அந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் கிடைக்கும், ஆனால் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் வற்றிய காரணத்தால், முதலை இருப்பிடம் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்த முதலை நீர்த்தேக்கத்தில் இருந்து நகர்ந்து கிராமப் பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற அஞ்சுவதாக கூறப்படுகிறது.
தற்போது, மீட்கப்பட்ட முதலையை காவிரியும், கொள்ளிடமும் இணையும் முக்கொம்பு பகுதியில் கொண்டு விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
A 7-foot-long crocodile, found wandering in a residential area in a village near Thanjavur, created a flutter on Wednesday. Sighting a crocodile is not uncommon for residents living along the banks of the river in Vadugakudi, Kollidam, but it is rare to spot a crocodile at your door step.
வடுகக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருக்க வேண்டிய முதலை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீட்டின் கதவு ஓரத்தில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை காலை வின்சென்ட் என்பவரது வீட்டின் கதவு இடுக்கில் 7 அடி நீள முதலை இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், பொதுமக்களின் உதவியுடன் முதலையை மீட்டனர். இதனிடையே வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடுகக்குடி அருகேயுள்ள நீர்த்தேக்கத்தில் இருந்த சில முதலைகளில், இது நகர்ந்து இங்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து அந்த நீர்த்தேக்கத்திற்கு நீர் கிடைக்கும், ஆனால் இந்தாண்டு கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் வற்றிய காரணத்தால், முதலை இருப்பிடம் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்த முதலை நீர்த்தேக்கத்தில் இருந்து நகர்ந்து கிராமப் பகுதிக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாலை நேரங்களில் வீட்டைவிட்டு வெளியேற அஞ்சுவதாக கூறப்படுகிறது.
தற்போது, மீட்கப்பட்ட முதலையை காவிரியும், கொள்ளிடமும் இணையும் முக்கொம்பு பகுதியில் கொண்டு விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
A 7-foot-long crocodile, found wandering in a residential area in a village near Thanjavur, created a flutter on Wednesday. Sighting a crocodile is not uncommon for residents living along the banks of the river in Vadugakudi, Kollidam, but it is rare to spot a crocodile at your door step.