ஆப்நகரம்

காா் ஓட்டும்போது தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி காவல்துறை அபராதம்

திருச்சியில் காா் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சாியாக இருந்தும் ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

TOI Contributor 3 Dec 2017, 5:03 pm
திருச்சியில் காா் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சாியாக இருந்தும் ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil trichy police put fine for driving without helmet
காா் ஓட்டும்போது தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி காவல்துறை அபராதம்


திருச்சி மாவட்ட காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட அமல்ராஜ், இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடிய அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். இதனைத் தொடா்ந்து காவல்துறையினா் திருச்சி மாநகரம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சியை அடுத்துள்ள கல்லணை அருகே வேங்கூா் பகுதியில் காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக காாில் வந்த ஜெயராஜ் என்பவரது வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சாிபாா்த்துள்ளனா்.

அவா் சீட் பெல்ட் அணிந்திருந்ததாகவும், ஆவணங்கள் சாியான முறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் தலைக்கவசம் அணியவில்லை என்று பொய்யான வகையில் அபராதம் வசூலித்துள்ளனா். காவல்துறையினாின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி