ஆப்நகரம்

திருச்சி மத்திய சிறையில் பணியாற்றும் பெண் வார்டன் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வந்த பெண் வார்டன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Feb 2019, 3:00 pm
திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வந்த பெண் வார்டன் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil திருச்சியில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை


கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட டி. செந்தமிழ்செல்வி (23), திருச்சி மத்திய சிறைச்சாலையில் பெண் வார்டனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் காவலர்கள் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

உடலை கைப்பற்றிய காவல்துறையினர், திருச்சி கே.கே. நகரில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் காவலர் செந்தமிழ்செல்வியின் மரணம் குறித்து, அவருடன் பணியாற்றிய பிற காவலர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி