ஆப்நகரம்

9ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; திருச்சி பள்ளி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்!

பாலியல் தொந்தரவு விவகாரத்தில், பள்ளி தாளாளர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Samayam Tamil 28 Jun 2018, 7:29 pm
திருச்சி: பாலியல் தொந்தரவு விவகாரத்தில், பள்ளி தாளாளர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
Samayam Tamil child-sexual-abuse
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு


திருச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக குணா ஜோதிமணி(63) இருக்கிறார். இவர் அப்பள்ளியின் சிறுமிகள் விடுதியின் வார்டனாகவும் இரட்டைப் பணி செய்து வந்துள்ளார். இதையடுத்து அவர் 9ஆம் வகுப்பு மாணவிக்கு, அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 2017ல் தொடங்கிய இந்த கொடூர செயல், கடந்த மார்ச் மாதம் தான் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விசாரணை, சில பெரும்புள்ளிகளின் தலையீட்டால், மூன்று மாதங்கள் காலதாமதம் ஆகியுள்ளது.

கடந்த 4ஆம் தேதி, குணா ஜோதிமணிக்கு எதிராக போஸ்கோ சட்டத்தின் பிரிவு 9(o) மற்றும் 10 ஆகிய பிரிவுகளின் கீழ், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் குணா ஜோதிமணி ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

எனவே அவரைக் காவல்துறையினர் கைது செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இதனைத் தொடர்ந்து கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குணா ஜோதிமணி சரண் அடைந்தார்.

Trichy school correspondent accused of sexually abusing minor girl surrenders before court.

அடுத்த செய்தி