மாந்திரீகத்தில் நம்பிக்கை கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இறந்த நிலையில் அவரது உடல் கடந்த வெள்ளியன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை துவரங்குறிச்சி அடுத்த ராசிப்பட்டியை சேர்ந்த மலையாண்டி என்பவரது இரட்டை மகன்களில் ஒருவர் ராமன். இவர் பிசியோதெரபிஸ்ட் பட்டயப்படிப்பு படித்து வந்தார்.
கல்வியில் நாட்டம் குறைந்த அவருக்கு, மாந்த்ரீகத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் தனது குடும்பம் வறுமையில் வாடுவதற்கு செய்வினை கோளாறு தான் காரணம் என நம்பியுள்ளார்.
இதன் மூலம், தனது எதிரிகளை பழி வாங்க ராமன் முடிவெடுத்துள்ளார். ஆனால் எப்படி பழி வாங்குவது என செய்வதறியாது தவித்த ராமன், மந்திரவாதியின் யோசனைப்படி தனது உயிரை மாய்த்து ஆவியாக சென்று எதிரிகளை பழிவாங்க முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஆண்டிச்சாமி கோவிலின் மணி மாட்டப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு கொள்வது போல் செல்பி எடுத்த ராமன், அதனை பிரேக்கிங் நியூஸ் என்று பவர் டைரக்டர் என்ற ஆப் மூலம் செய்தி போல தயார் செய்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
மேலும், கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தான் இறந்து ஆவியாக சென்று எதிர்களை பழிவாங்க போவதாக குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தை உயிர் நண்பன் பார்த்து கொள்வான் என்று அந்த கடிதத்தில் ராமன் குறிப்பிட்டிருந்தார்.
தூக்கிட்டு இறப்பதற்கு முன்னதாக ஆண்டிச்சாமி கோயிலின் மணி மாட்டப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு கொள்வது போல ஃசெல்பி எடுத்து அதனை பிரேக்கிங் நியூஸ் என்று பவர் டைரக்டர் என்ற ஆப் மூலம் செய்தி போல தயார் செய்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இது போன்ற மூட நம்பிக்கைகளை சொல்லிக்கொடுத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை துவரங்குறிச்சி அடுத்த ராசிப்பட்டியை சேர்ந்த மலையாண்டி என்பவரது இரட்டை மகன்களில் ஒருவர் ராமன். இவர் பிசியோதெரபிஸ்ட் பட்டயப்படிப்பு படித்து வந்தார்.
கல்வியில் நாட்டம் குறைந்த அவருக்கு, மாந்த்ரீகத்தின் மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் தனது குடும்பம் வறுமையில் வாடுவதற்கு செய்வினை கோளாறு தான் காரணம் என நம்பியுள்ளார்.
இதன் மூலம், தனது எதிரிகளை பழி வாங்க ராமன் முடிவெடுத்துள்ளார். ஆனால் எப்படி பழி வாங்குவது என செய்வதறியாது தவித்த ராமன், மந்திரவாதியின் யோசனைப்படி தனது உயிரை மாய்த்து ஆவியாக சென்று எதிரிகளை பழிவாங்க முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஆண்டிச்சாமி கோவிலின் மணி மாட்டப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு கொள்வது போல் செல்பி எடுத்த ராமன், அதனை பிரேக்கிங் நியூஸ் என்று பவர் டைரக்டர் என்ற ஆப் மூலம் செய்தி போல தயார் செய்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
மேலும், கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தான் இறந்து ஆவியாக சென்று எதிர்களை பழிவாங்க போவதாக குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தை உயிர் நண்பன் பார்த்து கொள்வான் என்று அந்த கடிதத்தில் ராமன் குறிப்பிட்டிருந்தார்.
தூக்கிட்டு இறப்பதற்கு முன்னதாக ஆண்டிச்சாமி கோயிலின் மணி மாட்டப்பட்டிருந்த கயிற்றில் தூக்கிட்டு கொள்வது போல ஃசெல்பி எடுத்து அதனை பிரேக்கிங் நியூஸ் என்று பவர் டைரக்டர் என்ற ஆப் மூலம் செய்தி போல தயார் செய்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இது போன்ற மூட நம்பிக்கைகளை சொல்லிக்கொடுத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.