ஆப்நகரம்

அதிமுகவில் குடுமிபிடி சண்டை; அமமுகவிற்கு பக்கா பிளான் ரெடி பண்ணிய டிடிவி தினகரன்!

அமமுக கட்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 1 Oct 2020, 2:57 pm
தமிழகத்தில் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு ஓராண்டிற்கும் குறைவான கால அவகாசமே இருக்கின்றது. இந்த சூழலில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக திரை மறைவில் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளன. வேட்பாளர் தேர்வு, மாவட்ட பொறுப்பாளர்கள் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு கோஷ்டிகளாகப் பிரிந்து அதிரடியான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
Samayam Tamil TTV Dhinakaran


இதற்கிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க டிடிவி தினகரன் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு எங்கிருக்கிறார் என்று எந்தவொரு தகவலும் இல்லை. அதேசமயம் சென்னையில் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கி கட்சி தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அமமுக கட்சி சார்பில் அதிரடியான அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. அதாவது பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

1) திருவண்ணாமலை

* வடக்கு மாவட்ட கழக செயலாளர் - மா.கி.வரதராஜன்
* மத்திய மாவட்ட கழக செயலாளர் - ஏ.ஜி.பஞ்சாட்சரம்
* தெற்கு மாவட்ட கழக செயலாளர் - ஏ.பரந்தாமன்
திருவண்ணாமலை அமமுக
2) தூத்துக்குடி வடக்கு

* கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் - பி.விஜயபாஸ்கரன்
தூத்துக்குடி அமமுக
3) தேனி

* வடக்கு மாவட்ட கழக செயலாளர் - ஆர்.ஜெயக்குமார்
* தெற்கு மாவட்ட கழக செயலாளர் - எம்.முத்துசாமி
தேனி அமமுக
ஓபிஎஸ் vs ஈபிஸ்: முதல்வர் வேட்பாளர் யார்? செங்கோட்டையன் சூசகம்!

4) புதுச்சேரி

* மாநில கழக இணைச் செயலாளர் - பா.விமலாஸ்ரீ
* மாநில கழக துணைச் செயலாளர் - ஜே.தமிழரசி
புதுச்சேரி அமமுக
5) நாகப்பட்டினம்

* தெற்கு மாவட்ட கழக செயலாளர் - ஆர்.சி.எம்.மஞ்சுளா சந்திரமோகன்
நாகை அமமுக
மேலும் அமமுக கழக அமைப்புச் செயலாளராக ஏ.கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளராக கே.சீனிராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கழக பணிகளை ஆற்றிட வேண்டும்.

கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி