ஆப்நகரம்

தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு, வசந்தகுமாரின் மறைவுக்கு தினகரன் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான வசந்தகுமாரின் மரணத்துக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Aug 2020, 7:39 pm
காங்கிரஸின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் உடல்நலகுறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அதற்கான சிகிச்சையை பெற்று வந்தார்.
Samayam Tamil vasantha kumar death


இந்நிலையில், அவருடைய உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று செய்தி வெளியிட்டது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் உயிரிழந்து விட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இத்துயர செய்தியை கேட்ட அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தினகரன் பதிவு, ''திரு.வசந்த குமார் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

''வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த திரு. வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.


கோயம்பேடு சந்தை திறப்பு, ஞாயிற்று கிழமை முழு முடக்கம் ரத்து - வணிகர் சங்கம் கடிதம்
''கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்'' என இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி