ஆப்நகரம்

அமமுகவின் பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டாா் டிடிவி தினகரன்

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைவமை அலுவலகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தோ்வு செய்யப்பட்டாா்.

Samayam Tamil 19 Apr 2019, 3:08 pm
அமமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்ததும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வாா் என்று அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் சி.ஆா்.சரஸ்வதி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran Assembly


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோா் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து டிடிவி தினகரன் அமமுக என்ற அமைப்பைத் தொடங்கினாா். சசிகலா கட்சியின் பொதுச் செயலாளா் என்றும், டிடிவி தினகரன் துணைப்பொதுச் செயலாளா் என்றும் அறிவிக்கப்பட்டது. நாங்கள் தனி கட்சி இடையாது. அதிமுகவின் ஒரு பிரிவு தான் நாங்கள். இரட்டை இலை சின்னம், அதிமுகவை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் என்று டிடிவி தினகரன் தொிவித்திருந்தாா்.

மேலும் அதிமுக மீது உரிமை கோாி வந்ததால் அமமுகவை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை, சட்டமன்ற இடைத்தோ்தல்களில் அமமுகவுக்கு சின்னம் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. அமமுக பதிவு செய்யப்படாத அமைப்பு என்பதால் பொதுவான சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தொிவித்தது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னா் மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் குக்கா் சின்னம் பொது சின்னமாக வழங்கப்பட்டது.

அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தல்களில் அமமுகவுக்கு பொதுவான சின்னம் தேவை என்றால், கட்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் கட்சியின் பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டாா். மேலும் கட்சியை தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் சி.ஆா்.சரஸ்வதி தொிவித்துள்ளாா்.

கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சசிகலா சிறையில் இருந்து வந்ததும், கட்சியின் தலைவராக பொறுப்பேற்பாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடருவாா் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி