ஆப்நகரம்

தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது - அரசு தடாளடி

தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைதொடங்கிவிட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

TNN 14 Sep 2017, 2:47 pm
சென்னை : தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கை தொடங்கிவிட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv dhinakaran faction 18 mlas suspend high court asks tn government
தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது - அரசு தடாளடி


டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏக்கள் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் முகாமிட்டுள்ளனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து விரைவில் விளக்கமளிக்க வேண்டும் என சபாநாயகர் கூறியிருந்தார். அந்த எம்.எல்.ஏக்கள் முதலில் அளித்த விளக்கம் விரிவாக இல்லை என கூறி மீண்டும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. செப்டம்பர் 14ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சபாநாயகர் எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என இந்த வழக்கிற்கு பதில் மனுவில் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தினகரன் டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை தொடங்கிவிட்டதாகவும், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளிக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி