ஆப்நகரம்

அப்படியெல்லாம் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jan 2019, 11:37 am
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil ttv


தமிழகத்தின் முன்னாள் முத்ல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி, கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் ஜனவரி 28 ஆம் தேதிஅந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் கஜா புயல் பாதிப்பு நிவாரணம் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்கள ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை இழந்திருக்கக் கூடும் என்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இதையடுத்து திமுக கட்சியினரும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருவாரூர் இடைத்தேர்தலில் தனக்கு குக்கர் சின்னர் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால், அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி