ஆப்நகரம்

தினகரன் கூட்டும் திடீர் பொதுக்குழு: சசிகலாவுக்கு முக்கிய பதவியா?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட உள்ளது.

Samayam Tamil 22 Feb 2021, 12:12 pm
அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட கட்சி இது என அமமுக குறித்து டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். சசிகலா வந்த பிறகு அந்தப் பணி வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவசர கதியில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ளது.
Samayam Tamil sasikala ttv dinakaran


பிப்ரவரி 9ஆம் தேதி அதிகாலை சென்னை வந்த சசிகலா தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள இல்லத்துக்கு சென்றார். அதன்பின் இப்போதுவரை அங்கிருந்து வெளியேவரவில்லை என்று கூறப்படுகிறது.

5 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வு: அமைச்சர் சொன்ன அறிவிப்பு!

அவர் வெளியே வராவிட்டாலும் அவரையும் பெரியளவில் யாரும் சந்தித்ததாக தகவல் இல்லை. பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மட்டுமே ஒருமுறை சந்தித்தார். சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளார். தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார் டிடிவி தினகரன்.

ஆனால் சசிகலாவோ தினகரன், விவேக், வழக்கறிஞர்கள் ஆகியோரோடு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் சசிகலாவின் அறிவுறுத்தல்படியே அமமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட உள்ளதாக கூறுகிறார்கள்.

கொங்கு மண்டலத்தை பங்கு போடும் அமைச்சர்கள்: யாருக்கு எந்த தொகுதி?

ஜெயலலிதாவின் பிறந்தநாளை பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடிவிட்டு அதற்கு மறுநாள் பிப்ரவரி 25ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுகிறார் தினகரன். காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ள இந்தப் பொதுக்குழுவில் பத்து மாவட்டங்களுக்கு ஒரு மையம் எனத் தமிழ்நாடு முழுவதும் பத்து திருமண மண்டபங்களை ஏற்பாடுகள் செய்துவருகின்றனர் அமமுகவினர்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறுகின்றனர். முக்கியமாக சசிகலாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கலாம் என்கிறார்கள் அமமுக வட்டாரத்தில்.

அடுத்த செய்தி