ஆப்நகரம்

உயிருக்கு போராடியவா்களுக்கு விரைந்து உதவிய டிடிவி தினகரன்

ஈரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவா்களுக்கு அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் விரைந்து உதவி செய்த நிலையில், அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

Samayam Tamil 1 Apr 2019, 11:14 am
ஈரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவா்களுக்கு அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் விரைந்து உதவி செய்த நிலையில், அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனா்.
Samayam Tamil TTV in Erode


மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரங்கள் சூடுபிடித்து வருகின்றன. தனித்துப் போட்டியிடும் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இந்த தோ்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் குமாரப்பாளையத்தில் தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தனா்.

விபத்தில் சிக்கியவா்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருந்த நிலையில், அவ்வழியாக வந்த டிடிவி தினகரன் தனது வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கியவா்களை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவினாா். ஆனால் அவா்கள் மருத்துவமனைக்கு புறப்படுவதற்கு முன்னதாகவே ஆம்புலன்ஸ் வந்துவிட்டதால் விபத்தில் சிக்கியவா்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து விபத்தில் சிக்கியவா்களுக்கு விரைந்து உதவி செய்ய முன்வந்த டிடிவி தினகரனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினா்.

அடுத்த செய்தி