ஆப்நகரம்

சுகேஷுடன் பேசினேன்: தினகரனிடம் உண்மையை வரழைந்தது டெல்லி போலீஸ்

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் பேசியதை டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையின் போது ஒப்புக்கொண்டிருக்கிறார்.

TNN 24 Apr 2017, 6:14 pm
டெல்லி: இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் பேசியதை டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையின் போது ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Samayam Tamil ttv dhinakaran in delhi for bribery charge investigation
சுகேஷுடன் பேசினேன்: தினகரனிடம் உண்மையை வரழைந்தது டெல்லி போலீஸ்


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற போட்டி போட்டன. இதனிடையே, அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெறும் நிலையில், இரட்டை இலை சின்னதை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் ரூ.1.30 கோடி லஞ்சம் வாங்கியதாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் டெல்லியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், டிடிவி தினகரன் மீதான குற்றசாட்டுக்கு அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இதன் அடிப்படையில் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆஜரான டிடிவி தினகரனிடம் மூன்றாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.

சுகேஷ் யாரென்றே தெரியாது என்று மழுப்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரன், இன்றைய விசாரணையில் அவருடன் தொலைபேசியில் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார். தொலைப்பேசி உரையாடலை போட்டுக்காட்டி கேட்ட போலீசாரிடம் வேறு வழியின்றி உண்மையைச் சொல்லிவிட்டார் தினகரன். உயர்நீதிமன்ற நீதிபதி என்று நினைத்து பேசியதாகவும் டிடிவி சொல்லியிருக்கிறார்.

தினகரனிடம் நடத்தப்படும் இந்த விசாரணை முழுமையாக வீடியோ பதிவுசெய்யடுகிறது.

அடுத்த செய்தி