ஆப்நகரம்

சசிகலா முன் அங்க பிரதட்சணம் செய்த திண்டுக்கல் சீனிவாசன்

சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் திருப்பதி கோயிலில் உருள்வது போல உருண்டதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

TNN 17 Sep 2017, 1:02 pm
சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் திருப்பதி கோயிலில் உருள்வது போல உருண்டதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Samayam Tamil ttv dhinakaran mocks dindigul srinivasan
சசிகலா முன் அங்க பிரதட்சணம் செய்த திண்டுக்கல் சீனிவாசன்


அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு தினகரன் ஆதரவாளர்கள் அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக உருவாகியுள்ளனர். அவர்களுக்குள் அன்றாடம் நடக்கும் மோதலில் பலருடைய வண்டவாளங்கள் அம்பலமாகி வருகின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் சில நாட்களாக தொடர்ந்து செய்துவருவது போலவே இன்றும் ஓ.பி.எஸ். – ஈபிஎஸ் கூட்டணியை கடுமையாக பொறிந்து தள்ளினார்.

அப்போது அவர், திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தன் மகன் தலையில் அடித்து சத்தியம் செய்து ஜெயலலிதாவை சசிகலா குடும்பம்தான் கொன்றது என்று சொல்கிறார். இதே திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்குவதற்காக திருப்பதி கோயிலில் உருள்வது போல உருண்டார் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி