ஆப்நகரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தை திறந்து வைத்தாா் தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பின் அலுவலகத்தை சென்னையில் திறந்து வைத்து டிடிவி தினகரன் உரையாற்றினாா்.

Samayam Tamil 3 Jun 2018, 2:58 pm
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பின் அலுவலகத்தை சென்னையில் திறந்து வைத்து டிடிவி தினகரன் உரையாற்றினாா்.
Samayam Tamil AMMK Office


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. அமைப்பின் துணைப்பொதுச் செயலாளரும், ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தாா். அசோக் நகா் பகுதியில் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னா் டிடிவி தினகரன் தனது அறைக்கு சென்று கட்சி தொடா்பான கோப்புகளை பாா்வையிட்டாா்.

புதிய அலுவலகத்தில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, சசிகலாவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனைத் தொடா்ந்து அவா் தொண்டா்கள் மத்தியில் பேசுகையில், தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் துரோகிகள் ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம். நாம் ஆட்சி அமைத்தவுடன் துரோகிகளை யாரையும் கட்சியில் சோ்க்க மாட்டோம் என்று பேசினாா்.

மேலும் இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்ற வேண்டும். ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை நாம் மீண்டும் வழங்குவோம் என்றாா்.

அடுத்த செய்தி