ஆப்நகரம்

இன்னும் 3 மாதங்களில் எடப்பாடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்: டிடிவி தினகரன்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் தமிழக மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

TNN 24 Dec 2017, 1:36 pm
மதுரை: மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் தமிழக மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ttv dhinakaran said that rk nagar people reflected the mind set of tamilnadu people
இன்னும் 3 மாதங்களில் எடப்பாடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்: டிடிவி தினகரன்


தமிழகம் முழுவதும் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் திமுக, அதிமுக வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதுகுறித்து மதுரையில் பேட்டியளித்த டிடிவி தினகரன்,”ஆர்.கே.நகர் மக்கள் தமிழக மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களில் எடப்பாடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு காரணமாக இருந்த கழகத் தொண்டர்கள் மற்றும் ஆர்.கே.நகர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி