ஆப்நகரம்

தேர்தல் அதிகாரிக்குத் தொப்பி வைக்கப் பார்க்கும் டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு நேரம் ஒதுக் வேண்டும் என்று அவரது தரப்பில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

TNN 26 Nov 2017, 4:52 pm
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு நேரம் ஒதுக் வேண்டும் என்று அவரது தரப்பில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Samayam Tamil ttv dhinakaran seeks to allot time to file petition for rk nagar by polls
தேர்தல் அதிகாரிக்குத் தொப்பி வைக்கப் பார்க்கும் டிடிவி தினகரன்


சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன.

இத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக கே.வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கை உறுதிசெய்ய, இம்மானுவேல் கே. முவ்யா சட்டம் ஒழுங்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதி. வேட்புமனு பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி முதல் நடக்கும்.

இந்ந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரனுக்கு நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரியான கே.வேலுச்சாமியிடம் டிடிவி தினகரன் தரப்பில் கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர் கார்களில் அணிவகுத்து வரக்கூடாது. அதிகபட்சம் 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வர அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி